அரசியலமைப்பிற்கு அமைய தேர்தலை பிற்போடமுடியாது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பிற்கு அமைய தேர்தலை பிற்போடமுடியாது. நிச்சயம் தேர்தல் இடம்பெற வேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர், ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
அதாவது எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் தேர்தல் இடம்பெற வேண்டும். தேர்தல் நடத்தப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே தேர்தல் நிச்சயம் இடம்பெறும்.அந்த சந்தர்ப்பத்தில் யார் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பர்.