ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு!
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடாளாவிய ரீதியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, வன்னி 60% , மட்டக்களப்பு 64 %, திருகோணமலை 63.9 %, கம்பஹா 80%, புத்தளம் 78% , மொனராகலை 77 %, பதுளை 73%, திகாமடுல்ல 70%, நுவரேலியா 80%, கொழும்பு 75%, இரத்தினபுரி 74% இற்கும் அதிகம்,
கேகாலை 72%, குருநாகல் 70% வாக்குகள் பதிவாகியுள்ளன.