நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை : மக்கள் அதிக நீரை அருந்த வேண்டும்!

0
183

நாட்டில், அதிக வெப்பம் நிலவும் நிலையில், உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுக்க, மக்கள் அதிக நீரை அருந்த வேண்டும் என, கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின், சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிகரித்த வெப்பம் காரணமாக, சிறுவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்த அதிகாரிகள், நீரிழப்புக்கு ஆளாக நேரிடும்.

களைப்பு, தூக்கம், சோர்வு, தலைவலி, வாந்தி மற்றும் பசியின்மை ஆகியவை, நீரிழப்புக்கான அறிகுறிகளாகும்.

அதனால், நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, பொது மக்கள் தொடர்ந்து நீர் அருந்த வேண்டும். என விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது, சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்தாலும், ஏப்ரல் மாதம் வரையில், வறட்சியான நிலையே காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.