நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பயன்பாடு 15 சத வீதத்தினால் அதிகரித்துள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனுஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதனால், நீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு, மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
ஹட்டன், கம்பலவத்தை, ஊருபொக்க, புஸ்ஸல்லாவ மற்றும் கொட்டகலை ஆகிய, 6 நீர் விநியோக கட்டமைப்புகளில் இருந்து, தற்போது மக்களின் தேவைக்காக நீர் திறந்து விடப்படுகின்றது.
கேகாலை மற்றும் குருணாகல் பகுதிகளில், மூவாயிரம் குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனுஜா களுஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.