பதுளையில் தோட்ட பகுதியிலிருந்து சடலம் மீட்பு

0
56

பதுளை பிரதேசத்தில் பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெமேரியா பீ தோட்ட பகுதியிலிருந்து நேற்று (17) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயதுடையவர் எனவும் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் சாம்பல் நிற காற்சட்டை ஒன்றை அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.