பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் கூட்டம் இன்று!

0
140

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் கூட்டம், இன்று காலை இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் கட்சித் தலைவர்கள் கூட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில், இன்று காலை இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில், பாராளுமன்ற கூட்டத்தின் அடுத்த வார ஒழுங்குப் பத்திரம் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்றம், அடுத்த வாரம், 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவுள்ளது.
இதேவேளை, அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின், ஊழியர் மட்டத்தில் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் அல்லது இணக்கப்பாடு தொடர்பில், விவாதம் ஒன்றுக்கு நாள் ஒதுக்குமாறு, பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்தின் போது, சபாநாயகரிடம் கோருவதாக, எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கோப் குழு மற்றும் அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழு உட்பட பல குழுக்கள், இன்னும் அமைக்கப்படாமல் இருக்கின்ற நிலையில், அது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.