பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது பரிசீலிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
லங்கா சுப்பர் டீசலின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில் இதனை பேருந்துகள் பயன்படுத்த முடியும் என்று கூறினார்.