தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் பொது வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என மெலிஞ்சிமுனை, புளியங்கூடல், பருத்தியடைப்பு நாரந்தனை போன்ற இடங்களில் பிரசார நடவடிக்கள் மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு மாகாண மீனவ அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த தேர்தல் பிரசாரத்தில் அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா, கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம், மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியிருந்தனர்.