மட்டக்களப்பில் இரண்டாம் மொழிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தோரின், கலை விழா

0
108

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா நேற்றைய தினம்,மண்முனை வடக்கு பிரதேச செயலக
மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் விசேட அதிதியாகவும்
கலந்து சிறப்பித்திருந்தார்.
அதிதிகள் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
150 மணித்தியால கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களின் கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள்
அரங்கை அலங்கரித்திருந்தன.
நாடளாவிய ரீதியில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்களங்களில் கடமையாற்றும் 65 அரச உத்தியோகத்தர்கள் இக்கற்கைநெறியினை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.