மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில், ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 62 வயதுடைய பூபாலப்பிள்ளை யோகநாதன் என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில்
உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆற்றிற்கு சென்று வலையினை எடுப்பதற்காக சென்ற போது, வலிப்பு நோய் ஏற்பட்டு ஆற்றினுள் விழுந்து அவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.