வெளியாகியுள்ள 2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம், மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலிருந்து 54 மாணவர்கள் பல்கலைக்;கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இம் மாணவர்களை கௌரவிக்கு நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் நிஹால் அஹமட் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அமீரும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையிலிருந்து வைத்தியத்துறைக்கு 7 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 4 மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 15 மாணவர்களும், வர்த்தப் பிரிவு, உயிர் முறைமைகள் தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவத் துறைகளில் இருந்து தெரிவான மாணவர்கள் உட்பட 54 மாணவர்கள் பல்கலைக்;கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.