மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவில் தோற்றவுள்ள மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கும் நோக்கில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் சிந்தனையில் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
உயர்தரப் பிரிவில் பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல், இணைந்த கணிதம் பாடங்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக இச் செயற் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் மூலம் 31 வீதமான உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தெரிவித்தார்.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்ற இச் செயலமர்வில், பிரதிக் கல்வி பணிப்பாளர்களான ஜெயந்திமாலா பிரியதர்சன், திவிதரன், ஜீவானந்தம், அதிபர்கள், கணித,
விஞ்ஞான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில், மாணவர்களுக்கான பெறுபேறுகளை அதிகரிக்கும் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன