மட்டக்களப்பு மாநகர சபையில் இப்தார் நிகழ்வு

0
161

மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோத்தர்களின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு மாநகர பிரதி ஆணையாளர் யு.சிவராஜா தலைமையில் இன்று மாநகர சபை நகர மண்டபத்தில் நடைபெற்றது.


மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இடையில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக மாநகர ஆணையாளர் என்.மதிவண்ணன் கலந்து கொண்டார்.


நிகழ்வில் இப் தார் நிகழ்வுக்கான விசேட உரையினை கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி எஸ்.எல்.எம். நஷ் மல் பலாஹி வழங்கினார்.
நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.