எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான, வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பூர்வாங்கப் பணிகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தால், வாக்குச் சீட்டுக்கள் இன்று காலை, மாவட்ட பிரதான அஞ்சலகத்திடம், வழங்கப்பட்டது.
வாக்களார் அட்டைகளை, மாவட்டத்தில் உள்ள கல்குடா, பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் அமைந்துள்ள, தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை, மாவட்ட அஞ்சல் திணைக்களம் முன்னெடுத்தது.
பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், வாக்குச் சீட்டுக்கள், தபாலகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.