மட்டு.அருப்பே பாலர் பாடசாலையின்
இல்ல விளையாட்டு போட்டி

0
207

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு அருப்பே பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் அருட்பணி எஸ்.றொசான்,எஸ்.ஜெ அடிகளாரின் தலைமையில் புனித மிக்கேல் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர், இதனை தொடர்ந்து அதிதிகளினால் தேசிய மற்றும் இல்லகொடிகள் ஏற்றப்பட்டு மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.

தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களின் கற்றல் மற்றும் பாடவிதான செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.நிகழ்வில் அதிதிகளாக புனித மிக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா, பிரதி அதிபர் லெபோன் சுதன் ,அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள்,கோட்டமுனை பொதுசுகாதார பரிசோதகர் ,பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோருடன் பாடசாலை சிறார்கள்,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .