29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு நகரில் தொற்றுநீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை

மட்டக்களப்பு நகர் பகுதியில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரம்பல் நிலையினை கட்டுப்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .தயாபரனின் வழிகாட்டலின் கீழ் மாநகர சபை தீயணைப்பு படை பிரிவினர் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ; பங்களிப்புடன் மட்டக்களப்பு நகர் பொதுச் சந்தை பகுதிகளில் தொற்று நீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

மூன்று நாட்கள் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு நாளைய தினம் பயணத்தடை தளர்த்தப்படவுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வருகை தரும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles