மலையக மக்களின் பிரச்சினைகளை, ஐ.நா வரை இன்று கொண்டுசென்றுள்ளோம் : வே.இராதாகிருஷ்ணன்

0
146

மக்களிடம் வாக்குகளைப் பெற்று விட்டு, பேசாமல் இருக்கவில்லை எனவும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருவதாகவும், மலையக மக்களின் பிரச்சினைகளை, ஐக்கிய நாடுகள் சபை வரை இன்று கொண்டு சென்றுள்ளதாகவும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று, நுவரெலியா – இராகலை பிரதேசத்தின், மலையக மக்கள் முன்னணியின் தோட்ட தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களுடான சந்திப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.