மஸ்கெலியா நகரில் மதுபான நிலையம் உடைத்து கொள்ளை

0
45

மஸ்கெலியா நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்று நேற்றுக் (24) காலை உடைக்கப்பட்டு சுமார் 130,000 ரூபா பணமும் மதுபான போத்தல்களும் திருடப்பட்டுள்ளதாக மதுபானசாலை முகாமையாளரால் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிசிரிவி காணொளிகளின் படி, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நபர் ஒருவர் முகமூடியுடன் மதுபானசாலையின் பூட்டை உடைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேக நபர் மஸ்கெலியா தபால் நிலைய வீதி ஊடாக பயணித்தமையும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.