மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

0
260

2022ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில், 92 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளன என கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 2 ஆயிரத்து 338.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சிடப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள் அடுத்த தவணை ஆரம்பமாவதற்கு முன்பே அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.