மாத்தறை பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் பாலத்திற்கு அடியில் உள்ள நீர்நிலையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
5 அடி உயரமுடைய 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.