30 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மாற்றுத்திறனாளிகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள், தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இம்முறை மாற்றுத்திறனாளிகளுக்கு தற்காலிக அடையாள அட்டையை வழங்கியுள்ளோம்.
குறித்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்களிக்க முடியும். என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles