மீண்டும் களமிறங்கும் வனிந்து ஹசரங்க

0
136

உலகக் கிண்ணப் போட்டிகளின் தொடர் தோல்வியடைந்தமைக்காக மிகவும் வருந்துவதாகவும் எல்லா நேரங்களிலும் நாட்டிற்காக விளையாடியதாகவும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

எல்பிஎல் போட்டிக்குப் பிறகு, தனது காயம் ஓரளவுக்கு குணமடைந்துள்ளதாகவும், ஆனால் பயிற்சி தொடங்கிய பிறகு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சத்திரசிகிச்சையின் பின்னர் 12 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தற்போது சத்திரசிகிச்சை முடிந்து 05 வாரங்கள் கடந்துள்ளதாகவும் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் இருந்து மீண்டும் சிறிய அளவில் தனது பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வனிந்து குறிப்பிட்டுள்ளார். 12 வாரங்கள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை-ஜிம்பாப்வே போட்டியில் விளையாடுவதே தனது நம்பிக்கை என மேலும் தெரிவித்துள்ளார்.