முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 4 மாணவர்கள் படுகாயம்

0
247

பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்லந்த பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில்இ அவர்கள் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.