முதல் காலாண்டில் தனிநபர் முற்பண வருமான வரியாக 25 ஆயிரத்து 577 மில்லியன் ரூபா வசூலிப்பு

0
146

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனிநபர் முற்பண வருமான வரியாக 25 ஆயிரத்து 577 மில்லியன் ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின், ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியன் ரூபாவும்,பெப்ரவரி  மாதத்தில் 10,540 மில்லியன்  ரூபாவும்  மார்ச் மாதத்தில் 11,931 மில்லியன் ரூபாவும் தனிநபர் முற்பண வருமான வரியை அறிவிட்டுள்ளதாக  உள்நாட்டு இறைவரித் திணைக்கள  மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதவற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட புதிய வரி கொள்கையை அடுத்தே இவ்வாண்டின் முதல் காலாண்டின் தனிநபர் வரி வருமானம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

இவ்வாறான  நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கொண்டுவரப்பட்ட வரிக்கொள்கையை எதிர்த்து அரச உத்தியோகத்தர்கள், வங்கி  ஊழியர்கள் என  ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளத்தை பெறுவோர் அண்மைக்காலமாக ஆர்ப்பாட்டங்களையும் பணிப்பகிஷ்கரிப்புகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த புதிய வரி கொள்கையின் காரணமாகவே, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இவ்வாண்டுக்கான முதல் காலாண்டு தனிநபர் முற்பண வரி வருமானம் அதிகரித்துள்ளமையினால் எதிர்வரும் காலங்களில்  அதிகளவான வரி வருமானம் வசூலிக்க முடிவதுடன் நாட்டை  பொருளாதார ரீதியாக அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.