முல்லைத்தீவில் குடும்பஸ்தரை தாக்கிய கரடிகள்!

0
210

முல்லைத்தீவு கொக்காவில் காட்டுப்பகுதியில், விறகு வெட்டுவதற்காக சென்ற குடும்பஸ்தர், கரடியின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில்,
அவருக்கு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
முறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான, சிவபாலகிருஸ்ணன் நேற்று மாலை விறகு வெட்டுவதற்காக, கொக்காவில்
பெண்கள் இராணுவ முகாமிற்கு பின்புறமாகவுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
இதன்போது இரண்டு கரடிகள், குடும்பஸ்தரை கடுமையாக தாக்கியுள்ளன.
முகம் உட்பட உடற்பகுதிகளில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பஸ்தருக்கு, பெண் இராணுவ வைத்திய குழுவினர் முதலுதவியளித்து, அவரை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குடும்பஸ்தரின் முகப் பகுதியில் கரடிகள் தாக்கியபோதும், அவரது பார்வைக்கு எதுவித பிரச்சினையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியர்களின் கண்காணிப்பில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில், குடும்பஸ்தருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு
வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.