28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டியில் வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை!

முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் சிறுவியாபார வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளதான சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் அறிக்கையின் பின்னர் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள். முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் வணிக நிலையத்திற்குள் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். 68 வயதுடைய அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின்போது அவர் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து பொலீசார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் தடையவியல் பொலீசார் வரவளைக்கப்பட்டு தடயங்கள் திரட்டப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles