யானைத் தந்தத்துடன் ஒருவர் கைது

0
40

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் யானையின் 4 அடி நீள தந்தத்தை கோடரியால் வெட்டி மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் யானைத் தந்தத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பலாந்தோட்டை மாமடல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடிப்படை சியம்பலாண்டுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டியாகல வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.