யுபுன் அபேகோன் இன்று களத்தில்!

0
30

டுபாயில் இன்று (09) நடைபெறும் டுபாய் கிராண்ட பிரிக்ஸ் தடகள போட்டியில் இலங்கை குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் களமிறங்கவுள்ளார்.

டுபாயில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்த ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்கு சென்றிருக்கும் இலங்கை வீரர்களுடன் அவர் இணைந்துள்ளார். இந்த போட்டிக்கான இலங்கை தடகள வீரர்கள் நேற்று முன்தினம் டுபாய் புறப்பட்டுச் சென்றனர். இத்தாலியில் வசிக்கும் யுபுன் அங்கிருந்து டுபாய் சென்றுள்ளார்.

குறிப்பாக ஐந்து ஆண்டுகளின் பின்னரே அவர் இலங்கை சார்பில் அஞ்சலோட்டப் போட்டி ஒன்றில் பங்கேற்கிறார்.   100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 விநாடிக்கு குறைவான காலத்தில் நிறைவு செய்திருக்கும் ஒரே தெற்காசிய வீரரான யுபுன் இதற்கு முன்னர் கடைசியாக 2019 இல் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலேயே இலங்கை சார்பில் அஞ்சலோட்டப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

பெர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யுபுன் ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் ஆண்களுக்கான 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். இந்த அஞ்லோட்டப் போட்டியில் யுபுனுடன் சமோத் யோதசிங்க, மரோன் விஜேசிங்க மற்றும் தினெத் வீரரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காலில் ஏற்பட்ட உபாதையில் இருந்து மீண்ட யுபுன் 2023 பர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்குப் பின்னர் பிரதான போட்டி ஒன்றில் பங்கேற்பது இது முதல் முறையாகும்.