வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தொடர்பாக மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விழிப்புணர்வு!

0
153

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தொடர்பான விசேட விழிப்புணர்வு கலந்துரையாடல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய, மலையக பெருந்தோட்டங்களில் கட்சி முக்கியஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அக்கரப்பத்தனை பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சக்திவேல் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் சச்சுதானந்தன் தலைமையில், அக்கரப்பத்தனை பகுதி முழுவதும் இவ் விழிப்புணர்வு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் வேதனமாக ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தள்ளுபடி செய்யக்கோரி முதலாளிமார் சமேளனத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கு, மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.