அவுஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இரண்டாவது மாநிலமான விக்டோரியாவில் அமுலாக்கப்பட்டுள்ள முடக்கநிலை, மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கப்பா என பெயரிடப்பட்டுள்ள B.1.617.1 என்ற கொரோனா திரிபின் பரவல், மெல்போனில் அதிகரிக்கின்றமையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, யூன் 10ஆம் திகதிவரை விக்டோரியா மாநிலத்தில் முடக்கல் நிலை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.