புலத்சிங்கல-ஹல்வத்துர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றினால் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
புலத்சிங்கள ஹல்வத்துர பகுதியில் இங்கிரியில் இருந்து புலத்சிங்கள நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் மோதியுள்ளார்.குறித்த நபர் பாதையை கடப்பதற்கு முயற்சித்த வேளை, மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதனை தொடர்ந்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளதுடன் அதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயற்சித்த போதும் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.