கிழக்கு மாகாணத்தில் வரலாற்று புகழ்பெற்ற சித்தாண்டி முருகன் ஆலயத்தில் வைகாசி விசாக தினமான இன்று ஆலயத்தில் விசேட யாகம் மற்றும் சங்காபிசேகம் இடம்பெற்றது.
முருகப் பெருமானின் ஜனனதினமான இன்றைய நாளில் முருகனுக்கு விசேட யாகம் மற்றும் 108 சங்காபிசேகம் என்பன ஆலய நித்திய பூசகர் சிவஸ்ரீ வசந்தநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
கும்ப யாகம் இடம்பெற்றதும் கும்பம் உள்வீதி எழுந்தருளி விநாயகர் பெருமானுக்கு அபிசேகம் இடம்பெற்றதும் பின்னர் முருகப்பெருமானுக்கு அபிசேகம் மற்றும் 108 சங்காபீசேகம் என்பன இடம்பெற்று விசேட பூசை நடைபெற்றது.
ஆலயத்தில் தேவாரா பாராயணம் பாடப்பட்டு ஆலய வழிபாடுகளில் சுகாதார நடமுறையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட பக்தர்கள் மாத்திரம் முகக்கவசம் அணிந்து ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் உள்ள அனைவருக்குமான நலன்பெறவேண்டி விசேட பிரார்த்தனை பூசை இடம்பெற்றது.
இன்றைய நாளில் நாட்டிலுள்ள முருகன் ஆலயங்களில் முருகப்பெருமானுக்கு விசேட யாக பூசை மற்றும் ஆராதனைகள் இடம்பெற்ற்றமை குறிப்பிடத்தக்கது.