ஸ்பெயினின் வலென்சியாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ பரவலில் 10 உயிரிழந்துள்ளதுடன் பலர் மாயமாகியுள்ளனர்.
இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, காணாமல் போனவர்களை இனி தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், தீ பரவியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிடத்தின் முகப்பில் அதிக அளவில் எரியக்கூடிய உறைப்பூச்சு, அப்பகுதயில் வீசிய பலத்த காற்று தீ பரவுவதற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அந்த இடத்தை பார்வையிட்டதுடன் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.