29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரச சேவையில் நிலவும் சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் – பந்துல குணவர்தன

அரச சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இம்பெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரச சேவையில் பல்வேறு ஊழியர்களுக்கிடையே நிலவுகின்ற சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அந்தந்த தொழிற்சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த சம்பள ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விடயங்களை ஆராய்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறித்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles