28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்தார்

மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹாடாட் – சேர்வோஸ், இலங்கைக்கான உலக வங்கியின் முகாமையாளர் திருமதி. சியோ கண்டா ஆகியோர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்யே பேராசிரியர் டபிள்யு.டி லக்ஸ்மனை ஒரு மரியாதைக்குரிய சந்திப்பில் நேற்று (23) கலந்து கொண்டனர்.

அவர்கள் பரஸ்பர விருப்பங்களுள்ள பல்வேறுபட்ட விடயங்களை அங்கு கலந்துரையாடினர்.

தோற்றம்பெற்று வருகின்ற மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற பொருளாதாரங்கள் அவர்களின் உற்பத்தி மற்றும் புத்தாக்க இயலளவினை உறுதிப்படுத்துவதற்கு இயலச் செய்து, அதனூடாக அத்தகைய நாடுகளின் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதற்கு பல்புடை நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படும் ஆதரவுகளினை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியத்தினை ஆளுநர் லக்ஸ்மன் வலியுறுத்தியிருந்தார்.

கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்களில் இலங்கையின் பல்வேறு துறைகளுக்கு தற்போது மற்றும் எதிர்கால உலக வங்கியின் ஆதரவு பற்றி, குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார துறைகள், அதே போன்று சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளின் முறைசாரா துறை பற்றியும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles