30 C
Colombo
Wednesday, March 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பிலேயே அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் பதிவு

நாட்டில் நேற்று பதிவான 443 புதிய கொரோனா நோயாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி பொரளையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியிலிருந்து 138 பேரும், கொழும்பு வடக்கிலிருந்து 21 பேரும், கொழும்பு துறைமுகத்திலிருந்து 11 பேரும், 42 பேர் கொழும்பின் வேறு பல இடங்களிலிருந்தும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனக் கண்டறியப்பட்டனர்.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 62 பேரும், களுத்தறையிலிருந்து 20 பேரும், இரத்தினபுரியிலிருந்து 09 பேரும், நுவரெலியாவிலிருந்து 06 பேரும், கண்டி மற்றும் மாத்தறையிலிருந்து தலா மூவரும், காலி மற்றும் குருநாகலிருந்து தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களுள் அடங்குவர்.

அதுமாத்திரமன்றி தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 25 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 5 ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டது.இதேவேளை நேற்று மாத்திரம் 94 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது. அவர்களில் 17 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர்கள் ஆவர்.

தற்போது நாடு முழுவதும் 12 ஆயிரத்து 187 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 5,858 ஆக பதிவாகியுள்ளது.

இரு வெளிநாட்டினர் உட்பட 6,305 பேர் நாடு முழுவதுமுள்ள 48 மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 400 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

Related Articles

மட்டு.பட்டிருப்பு வலயத்தில் விளையாட்டு விழா

மகிழ்ச்சியான கடமைச் சூழலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில்கடமையாற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு இடையில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

மட்டு.சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில், மாணவர் வரவேற்பு நிகழ்வு

2023 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு மட்டக்களப்பு சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பட்டிருப்பு வலக்கல்வி அலுவலக கல்வி...

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பெண் ஊழியர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டு.பட்டிருப்பு வலயத்தில் விளையாட்டு விழா

மகிழ்ச்சியான கடமைச் சூழலுக்கு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை இட்டுச் செல்வதை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில்கடமையாற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களுக்கு இடையில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

மட்டு.சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில், மாணவர் வரவேற்பு நிகழ்வு

2023 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு மட்டக்களப்பு சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பட்டிருப்பு வலக்கல்வி அலுவலக கல்வி...

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பெண் ஊழியர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்...

இலங்கை அதிகாரிகளுக்குத் தென்னாபிரிக்க அரசாங்கம் அழைப்பு இதனால் தென்னாபிரிக்க மனித உரிமைக் குழு அதிருப்தி

போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிகாரிகளுக்குத் தென்னாபிரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் தென்னாபிரிக்க மனித உரிமைக் குழுக்களின் கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

மன்னாரில் தெரிவுசெய்யப்பட்ட மீனவ பெண்கள் குழுக்களுக்கு நிதியுதவி

மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்களுக்கு, கருவாடு பதனிடுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சௌத்பார் மற்றும் ஓலைத்தொடுவாய்...