31 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீன ஜனாதிபதி மேலும் 15ஆண்டுகள் பதவியில் நீடிக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல்!

தற்போதைய சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மேலும் 15ஆண்டுகள் பதவியில் நீடிக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வரும் சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பெய்ஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மா சேதுங்குக்குப் பிறகு கட்சியின் அதிகாரமிக்க தலைவராக 67 வயதான ஸி ஜின்பிங் இப்போது வளர்ந்துள்ளார்.

ஆண்டு மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் 198 மத்தியக் குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சார்பில் மத்தியக் குழு உறுப்பினர்கள், ஜனாத்பதி ஸி ஜின்பிங்கின் செயற்பாடுகளை மதிப்பிட்டனர்.

தொடர்ந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஸி ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கும் (2021-2025) ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதில், உள்ளூர் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்றுமதியை அதிகம் நம்பியிருக்காமல், உள்நாட்டு நுகர்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் முன்வைத்த முக்கிய யோசனை என்றும் தெரிய வந்துள்ளது.

ஸி ஜின்பிங், ஜனாதிபதி பதவி தவிர, கட்சியின் பொதுச் செயலர் பதவி, இராணுவத்தின் தலைமைப் பதவி ஆகியவற்றையும் அவரே வைத்துள்ளார்.

அத்துடன் இந்த அறிவிப்பின் மூலம் ஆயுள் முழுவதும் அவர்தான் இப்பதவிகளில் இருப்பார் என்று தெரிகிறது. ஏனெனில், இப்போது வழங்கப்பட்டுள்ள 15 ஆண்டுகள் முடியும்போது அவருக்கு 82 வயதாகும். அதற்கு முன்னதாகவே அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு சீன ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஸி ஜின்பிங்கின் இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022ஆம் முடிவடைய இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பதவியில் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

Related Articles

U20 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை நடத்தும் உரிமையை இந்தோனேஷியா இழந்தது

20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை இந்தோனேஷியாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இப்போட்டிகளில் பங்குபற்றுவது இந்தோனேஷியாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மே 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தாக்கல்...

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடலை அதிகரிக்கும் செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் நோக்கில், முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

U20 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை நடத்தும் உரிமையை இந்தோனேஷியா இழந்தது

20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை இந்தோனேஷியாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இப்போட்டிகளில் பங்குபற்றுவது இந்தோனேஷியாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மே 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தாக்கல்...

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடலை அதிகரிக்கும் செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் நோக்கில், முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனைவரும் இந்துவாக திரட்சிபெற வேண்டும்!

வெடுக்குநாறி மலையிலுள்ள சிவனாலய விவகாரத்தைத் தொடர்ந்து பல பக்கங்களிலும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.இவ்வாறான கண்டனங்கள் வழமையானவை.இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது, கண்டனங்களை முன்வைப்பதும் - பின்னர் சில நாட்கள் - வாரங்களுக்கு...

இப்படியும் நடக்கிறது…!

நீச்சல் குளத்தில் தண்ணீர் அடிக்கடி கெட்டுவிடுவதை அறிந்தார் ஹோட்டல் முதலாளி.காவல்காரனை அழைத்து ஒரு வாரத்துக்கு யாரையும் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்காதே, என்றார்.அன்று மாலையே இளம் பெண் ஒருத்தி குளிப்பதற்காக...