29 C
Colombo
Friday, September 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: குஷ்பு கைது

திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார்.

மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பெற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க. அறிவித்திருந்தது.

ஆனால், சிதம்பரத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிலையில், அங்கு போராட்டம் நடத்துவதற்காக சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த குஷ்பு சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அவரை முட்டுக்காடு அருகே வழிமறித்து காவல்துறையினர் கைதுசெய்தனர். அதேபோல, போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்த பா.ஜ.கவின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவனை ஆத்தூர் சுங்கச்சாவடியில் காவல்துறை கைதுசெய்துள்ளது.

“பெண்களின் கண்ணியத்திற்காக இறுதிவரை போராடுவோம். பிரதமர் நரேந்திர மோதி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு குறித்துத்தான் பேசுவார். நாங்கள் அவர் பாதையில் செல்கிறோம். சில சக்திகளின் அராஜகங்களுக்கு அடிபணிய மாட்டோம்” என குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் “வி.சி.க. கோழைகள். மகிழ்ச்சியடையாதீர்கள். இது உங்கள் தோல்வி. நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சக்தி என்பதால்தான் கைதுசெய்யப்பட்டுள்ளோம். நாங்கள் அடிபணிய மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.

தங்களை கைதுசெய்திருப்பது அரசின் கையாலாகாத்தனம் என கே.டி. ராகவன் கூறியிருக்கிறார். “இந்து மதத்தை இழிவு படுத்திய திருமாவளவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்ய சிதம்பரம் செல்லும் குஷ்பூ அவர்களையும், என்னையும் கைது செய்திருப்பது அரசின் கைலாகாத்தனத்தை காட்டுகிறது.” என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சிதம்பரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க., வி.சி.க.வைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

BBC

Related Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில்...

அம்பாறை நிந்தவூரில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வறிய குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் வறிய குடும்பம் ஒன்றுக்கு பகுதியளவாக நிர்மானிக்கப்பட்ட வீடு இன்று அரச சார்பற்ற நிறுவனமான பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் இன்று...