29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு மட்டக்களப்பில் இடைநிறுத்தப்பட்டுள்ளதா?

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட 23 பிரதேச வைத்தியசாலைகளில், நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்களுக்கான
உணவு வழங்கும் செயற்பாடு, கடந்த 1ம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார ஊழியர் சேவை மத்திய சபை உறுப்பினரான லோக.ராஜ்குமார் மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கான உணவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணனிடம்
எமது செய்தியாளர் வினவியபோது,
கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோரோடு மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம்
நாளை முதல் மீண்டும் உணவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles