24 C
Colombo
Saturday, March 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரான்சில் தொடரும் தாக்குதல்; லியோனில் பங்குத்தந்தை சுடப்பட்டார்! 

பிரான்ஸில் இரண்டாவது பெரிய நகரமான லியோனில் Orthodox தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சுடப்பட்டதில் படுகாயமடைந்துள்ளார்.

லியோன் நகரின் ஏழாவது வட்டாரத்தில் (arrondissement) நேற்று சனி மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேவாலயத்தை மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறிய சமயம் பங்குத் தந்தையை நெருங்கிவந்த நபர் ஒருவர் தன்னுடன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு தடவைகள் சுட்டார் என்று கூறப்படுகிறது. வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் பங்குத்தந்தை சுயநினைவிழந்துள்ளார் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.

கிறீஸ் நாட்டைச் சேர்ந்த கே. நிக்கோலா என்ற 52 வயதுடைய பங்குத் தந்தை உயிராபத்தான கட்டத்தில் அவ்விடத்தில் வைத்தே அவசர முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கைத்துப்பாக்கியுடன் தப்பியோடிய தாக்குதலாளியை பொலீஸார் வலைவிரித்து தேடிவருகின்றனர்.

தாக்குதல் நடைபெற்ற பகுதியை பொலீஸார் மூடியிருக்கின்றனர். அங்கு நெருக்கடியைக் கையாள்வதற்கான பிரிவு ஒன்றை உள்துறை அமைச்சு உடனேயே திறந்திருக்கிறது.

நீஸ் நகரத் தாக்குதல் நடைபெற்று ஒரிரு நாட்களில் தற்சமயம் பங்குத்தந்தை ஒருவர் சுடப்பட்டிருக்கிறார்.

புகழ்பெற்ற நீஸ் நகரத்தின் தேவாலயம் ஒன்றினுள் வைத்து மூவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பிரான்ஸ் முழுவதும் தாக்குதல் முன்னெச்சரிக்கை நிலைமை (urgence attentat) அறிவிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. தேவாலயங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் ஏழாயிரம் இராணுவத்தினரை அரசு ரோந்துக் கடமையில் ஈடுபடுத்தி உள்ளது.

முக்கிய பெருநாளான அனைத்துப் புனிதர்கள் நாளை(All Saints’ Day) அனுஷ்டிப்பதற்கு தயாராகும் சமயத்தில் தேவாலயத்தின் உள்ளே நடந்தேறிய படுகொலைகள் நாடெங்கும் கத்தோலிக்க மக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது. இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட சமயத் தலைவர்கள் பல தரப்பில் இருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

தேவாலயத்தின் பாதுகாவலரான இரண்டு பிள்ளைகளின் தந்தை மற்றும் இரண்டு பெண்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். அவர்களில் 60 வயதான வயோதிபமாது கழுத்து அறுக்கப்பட்டதில் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். 44 வயதுடைய தாயாரான மற்றப் பெண் பிறேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது மூன்று பிள்ளைகளுடன் பிரான்ஸில் நீண்டகாலம் வசித்து வந்துள்ளார்.

காலையில் தேவாலயத்துக்கு வந்திருந்த பிறேசில் பெண்ணைத் தாக்குதலாளி கண்டபடி வெட்டியுள்ளார். உடல் முழுவதும் காயங்களுடன் அருகே உள்ள உணவகம் ஒன்றினுள் ஓடித் தஞ்சம் அடைந்த நிலையிலேயே அங்கு அவர் பின்னர் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.

தனது பிரஜை ஒருவர் கொல்லப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கும் பிறேசில் அரசு, தேவாலயத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

புலனாய்வுத் தரப்புகளால் முன்னரே அறியப்படாத 21வயதுடைய துனீசியா (Tunisian) நாட்டு இளைஞர் ஒருவரே இந்தப் படுகொலைகளைப் புரிந்திருக்கிறார் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்திருக்கிறது.

இவர் மிக அண்மையில் கடந்த மாதமே பிரான்ஸ் வந்திருக்கிறார். முதலில் மத்தியதரைக்கடலைத் தாண்டி இத்தாலியின் லாம்பெடுசா (Lampedusa) தீவு வழியே இத்தாலிக்கும் பின்னர் அங்கிருந்து பிரான்ஸ் எல்லைக்குள்ளும் நுழைந்திருக்கிறார். அவர் வசம் இருந்த இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆவணங்கள் இதனை உறுதி செய்துள்ளன.

பிரான்ஸில் அகதிகள் புகலிடம் கோரியதற்கான எந்தப் பதிவும் இல்லாத நிலையில் நிரந்தரமான வசிப்பிடம் தெரியாத இவ்விளைஞரது பின்னணிகளை அறிந்துகொள்வது விசாரணையாளர்களுக்குப் பெரும் சவாலாகி உள்ளது.

நீஸ் தேவாலயத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய...

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...