28 C
Colombo
Tuesday, March 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரான்ஸ் நீஸ் நகரில் தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் மூவர் பலி!, பலர் காயம்!

பிரான்சின் தெற்குப் பிராந்தியமான நீஸ் நகரின் மத்தியில் அமைந்துள்ள பசிலிக் நோத்ர டாம் தேவாலயத்தில் இன்று காலை 9.00 மணி கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் மூவர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதற் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவர் ஆலயத்திற்குள்ளும் ஒருவர் அருகிலுள்ள தேநீர்ச்சாலையிலும் பலியானதாக தெரியவருகின்றது.

உறுதிப்படாத முதற்கட்ட தகவல்களில் இந்தத் தாக்குதல் பயங்கரவாத தாக்குல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நீஸ் நகர மேயர் கிறிஸ்ரியன் எஸ்ற்றோசி (Christian Estrosi)தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அந்த தருணத்தில் தாக்குதல்தாரி அல்லாவோ அக்பர் என கூக்குரலிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரான்ஸ் அதிபர் நீஸ் நகர் நோக்கி விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு யூலை மாதத்தில்  நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 86 பேர் பலியாகியதும் 458 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 16 அக்டோபர் பேராசிரியர் தலைவெட்டிக்கொல்லப்பட்டதையடுத்து பிரான்ஸ் முஸ்லிம்களின் பயங்கரவாத தாக்குதலின் இலக்காக உள்ளதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

கொழும்பில் இன்று நேர்ந்த பரிதாப மரணம்!

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (27) பிற்பகல் கொழும்பு, கொட்டாஞ்சேனை...

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில், வைர விழா

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா, சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. வைர விழாவை முன்னிட்டு, இன்று காலை 9.00 மணிக்கு, கல்லூரி மைதானத்தில், மலர் வெளியீடு...