26.9 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதாக யாழ்ப்பாணம் பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலையால் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் கரையோர பிரதேசத்தில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, வடமத்திய, ஊவா, வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை பெய்யும் வேளைகளில், இடிமின்னல் தாக்கத்தால் ஏற்படும் இழப்புக்களைக் குறைப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்துகின்றோம். அதேவேளை காற்றின் வேகமும் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது.

கடந்த 4ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து 5ஆம் திகதி காலை 8.30 மணிவரை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் 11.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அச்சுவேலிப் பகுதியில் 8.3 மி.மீ மழை வீழ்ச்சியும், பருத்தித்துறைப் பகுதியில் 4.8 மி.மீ மழை விழ்ச்சியும், கோட்டைப் பகுதியில் 0.8 மி.மீ மழை வீழ்ச்சியும், நெடுந்தீவுப் பகுதியில் 7.0 மி.மீ மழை வீழ்ச்சியும், சாவகச்சேரி பகுதியில் 4.9 மி.மீ மழை வீழ்ச்சியும், யாழ்ப்பாணம் பகுதியில் 12.6 மி.மீ மழை வீழ்ச்சியும், தெல்லிப்பழைப் பகுதியில் 0.7 மி.மீ மழை வீழ்ச்சியும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 9.8 மி.மீ மழை வீழ்ச்சியும், கிளிநொச்சி ஆனையிறவுப் பகுதியில் 10.0 மி.மீ மழை வீழ்ச்சியும், அக்கராயன் பகுதியில் 8.0 மி.மீ மழை வீழ்ச்சியும் மற்றும் பதிவாகியுள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் மழை வீழ்ச்சி குறைவாகவே காணப்படுகின்றது. எமது நாட்டில் பொதுவாக ஒக்ரோபர், நவம்பர் மாதங்களில் மழை வீழ்ச்சி அதிகமாகக் காணப்படும்.

இந்த வருடம் ஒக்ரோபர் மாதத்தில் மிகக் குறைவாக 23.3 மி.மீ மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது. அது மாத்திரமின்றி நவம்பர் மாதத்திலும் குறைந்த மழை வீழ்ச்சியே எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை டிசெம்பர் மாதக் காலப்பகுதியில் ஓரளவு மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்தார்.

Related Articles

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின்...

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின்...

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...