29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு மேய்ச்சல் தரை குறித்து நேற்று நடைபெறவிருந்த கூட்டம் ரத்து; நேரில் சென்ற கஜேந்திரன் ஏமாற்றம்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை பிரச்சினை தொடர்பாக நேற்று வெலிக்கந்த மகாவலி அலுவலகத்தில் இடம்பெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. கஜேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு பிரதேசத்தில் மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிங்கள மக்கள் சோளப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காக நிலம் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமென கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் சாமல் ராஜபக்ச அவர்களைச் சந்தித்த்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞாகம் சிறீதரன், சாணக்கியன் இராசமாணிக்கம், ரெலோ அமைப்பைச் சேர்ந்த கருணாகரன், செல்வன் அடைக்கலம்நாதன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி சந்திப்பில் மேச்சல் தரை பகுதியில் சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்குவதனையும் குறித்த காணிகளில் சிங்கள மக்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதனையும் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி கோரிக்கை தொடர்பில் தற்காலிக இணைக்கம் ஏற்பட்டதுடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
குறித்த குழுவானது நேற்று திங்கட்கிழமை வெலிக்கந்தையில் உள்ள மாகவலி பிராந்திய அலுவலகத்தில் சந்தித்து குறித்த விடயம் பற்றி விரிவாக கலந்துரையாடிய பின்னர் குறித்த காணி அமைந்துள்ள மயிலத்தமடு பகுதிக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று கட்சியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், இளைஞர் அணிச் செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்த்தர்களுடன் குறித்த அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அங்கு சென்ற பின்னர்தான் குறித்த கூட்டம் கொறோனோ நெருக்கடி காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்ற விடயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
புதிய திகதி பின்னர் அறிவிக்கபடுமென குறித்த அலுவலத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

அதிக யானை மரணங்கள் பதிவாகும் நாடாக இலங்கை

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் யானைகள் – மனித மோதலினால் வருடாந்தம் அதிகளவான யானைகள் உயிரிழப்பதாக, துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.நவம்பர் 24ஆம் திகதி அஜித் மான்னப்பெரும...

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

இலங்கை இளைஞர்கள் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி ஜப்பானிய மொழிப்...

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பல கோடி ரூபா மோசடி – சஜித்

பல்லேகல, தம்புள்ளை மற்றும் கெத்தாராம ஆகிய 3 மைதானங்களுக்கும் 60x30 அடி LED திரைகளை கொள்வனவு செய்யும் போது பாரிய மூன்று மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அதிக யானை மரணங்கள் பதிவாகும் நாடாக இலங்கை

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் யானைகள் – மனித மோதலினால் வருடாந்தம் அதிகளவான யானைகள் உயிரிழப்பதாக, துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.நவம்பர் 24ஆம் திகதி அஜித் மான்னப்பெரும...

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

இலங்கை இளைஞர்கள் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி ஜப்பானிய மொழிப்...

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பல கோடி ரூபா மோசடி – சஜித்

பல்லேகல, தம்புள்ளை மற்றும் கெத்தாராம ஆகிய 3 மைதானங்களுக்கும் 60x30 அடி LED திரைகளை கொள்வனவு செய்யும் போது பாரிய மூன்று மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

ஜெரோம் பெர்னாண்டோ கைது

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) இன்று காலை வாக்குமூலம் அளிக்க சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.