மஹாகவி பாரதியாரின் நினைவுநாளை முன்னிட்டு, கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக, இசைத்துறையினரால்
நடாத்தப்பட்ட பாரதியார் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
மஹாகவி பாரதியாருடைய கொள்ளுப்பேரன் கலாநிதி.இராஜ்குமார் பாரதியும் நிகழ்வில் பங்கேற்றார்.
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் பாரதி விழா இடம்பெற்றது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் நீல மாதவனானந்த ஜீ மஹராஜ் ஆன்மீக அதிதியாகக் கலந்துகொண்டார்.
,முன்னிலை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசாவும், பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கமும்,
சிறப்பு அதிதியாக இளைப்பாறிய பேராசிரியர் சி. மௌனகுருவும் கலந்து கொண்டனர்.
பாரதியாருடைய கவி வரிகளில் உருவாக்கப்பட்ட பாடல்களுக்கு இசையூட்டப்பட்டு இசை ஆற்றுகைகளும் நடன ஆற்றுகைகளும்
இடம்பெற்றன.
மஹாகவி பாரதியாருடைய கொள்ளுபேரனாகிய இராஜ்குமார் பாரதி மட்டக்களப்பு வருகையைத் நினைவுபடுத்தும் வகையில், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின்
முன்பாக, விபுலானந்தரினால் ஆராய்ச்சி செய்யப்பட்ட யாழ் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது