முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம், உடைந்த நிலையில் காணப்படுவதனால், போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற, ஏ-35 வீதியின் வட்டுவாகல் பாலமானது, எந்தவித புனரமைப்புக்களும் இன்றி காணப்படுகின்றது.
பாலத்தில், அடிக்கடி உடைவுகள் ஏற்படும் போது, தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர, நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது, பாலத்தின் மையப் பகுதியில், பாரிய உடைவு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றது.
வட்டுவாகல் பாலத்தின் பல இடங்களில் வெடிப்புக்கள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு மழைகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலையும் காணப்படுவதாகவும், குறித்த பாலத்தினை சீரமைத்து தரும்படியும் அப்பாலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.