யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, சண்டிலிப்பாய், மாசியப்பிட்டியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129ஆக உயர்வடைந்துள்ளது.