யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி முன்பாக உள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடன் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுபாட்டை இழந்து மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சண்டிலிப்பாய் பகுதியில் இருந்து சில்லாலை நோக்கி பயணித்த இளைஞன் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதாது மோட்டார் சைக்கிளை திருப்பிய நிலையில் முன்னிருந்த தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துன்னுள்ளானதில் உயிரிழந்துள்ளார்.