30 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு உரத்தை விநியோகிக நடவடிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு, உரத்தை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உரத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 11 ஆயிரத்து 537 மெற்றிக் டன் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மன்னார் மாவட்டத்தில் ஆயிரத்து 244 மெற்றிக் டன் உரமும், வவுனியாவில், 821 மெற்றிக் டன் உரமும், கிளிநொச்சி மாவட்த்தில், 820 மெற்றிக் டன் உரமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 694 மெற்றிக் டன்னும், யாழ்ப்பாணத்தில் 297 மெற்றிக் டன் உரமும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டததில், ஆயிரத்து 824 மெற்றிக் டன்னும், அம்பாறையில் 4 ஆயிரத்து 66 மெற்றிக் டன் உரமும், திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 746 மெற்றிக் டன் உரமும் விநியோகம் செய்யப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள 36 ஆயிரம் மெற்றிக் டன் உரம், விவசாய அமைச்சிற்கு நாளைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles