அம்பாறை திருக்கோவில் கல்வி வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி அங்குரார்ப்பண நிகழ்வு

0
107

அம்பாறை திருக்கோவில் கல்வி வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் அங்குராப்பண நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டியில் திருக்கோவில் வலயத்திற்கு உட்பட்ட 47 பாடசாலைகள் பங்குபற்றின.

அதிதிகள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். நிகழ்வானது பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசீர் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.உதயகுமார், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான சோ.சுரநூதன், ஏ.நசீர், ஏ.நௌபர்டீன், கே.கமலமோகனதாசன், திருக்கோவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த வருடம் கிழக்கு மாகாண மட்டத்தில் 2 ஆவது இடத்தைப் பெற்று சாதனை படைத்தமைக்காக உடற்கல்விப் கல்விப் பணிப்பாளர்களான கே.கங்காதரன், ஏ.நசீர் மற்றும் விளையாட்டு துறை உத்தியோகத்தர்களுக்கு விருது வழங்கப்பட்டதோடு,
மாகாண மட்ட சாதனை வீர, வீராங்கனைகளுக்கும் பரிசில்கள் வழங்கி, பாராட்டி கௌரவித்தனர்.