இயற்கை அனர்த்தத்தினால் காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரம் மாணவிகளுக்கு சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைப்பு

0
117

இயற்கை அனர்த்தத்தினால் காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள ஆயிரம் பாடசாலை மாணவிகளுக்கு தேவையான சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அகம் மனிதாபிமான வள நிலைய அமைப்பு மற்றும் அமெரிக்க யூத உலக சேவை நிதி நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இணைந்து இப்பணியினை முன்னெடுத்தது. காலி மாவட்டத்திலுள்ள மாபொலகம மத்திய கல்லூரியில் 100 மாணவிகளுக்கும், மாபொலகம சிறிசுனந்த மகா வித்தியாலய 500 மாணவர்களுக்கும் மற்றும் நாகொட றோயல் கல்லூரி 400 மாணவர்களுக்கும் உரிய சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டன.